Digital Image Library of Foundation for Library Awareness (DILFOLA)
வாழும் மரபு
DIL is a pilot project of Foundation for Library Awareness (FOLA) to preserve the Living Heritage of Sri Lankan Tamils which could be act as an institutional repository of the image collections of FOLA.
Image collections are an essential component of FOLA’s print and artifact collections both of their artistic and documentary value which have been collected over the years since the inception of FOLA.
The images are being collected from various sources. The presently existing tangible and intangible heritage were produced by taking photographs. The heritage replaced by modern way of life and lost its existence were collected by scanning the pictures available from print resources such as books, journals, newspapers, paintings, and collecting from websites.
FOLA has designed this DIL in a systematic and constructive user friendly way with the support of Dspace, the open source library software to preserve the cultural heritage of Sri Lankan Tamils which is available on intranet. The selective images of DIL are available in this blog for dissemination.
இந்த எண்ணிம விம்ப நூலகமானது இலங்கைத் தமிழர்களின் வாழும் மரபு சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விம்பங்களில் நேரடியாகப் பெறப்படக்கூடியவை நேரடியாக ஒளிப்படமெடுப்பதனூடாகவும் எம்மிடமிருந்து மறைந்து போனவை எழுத்துமூல பதிவேடுகளிலிருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டதாவும் உள்ளது.
Wednesday, July 24, 2013
Social Structures
சங்கடப்பலகை
Tuesday, July 23, 2013
Monday, July 22, 2013
Social Structures
Records of thoughts
Records of thoughts
(ஸ்ரீ. கதிரவேற்பிள்ளை.- மறுபதிப்பு.- சென்னை.- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,1910-)
வரலாறு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான இவ்வகராதி மூன்று பகுதிகளைக் கொண்டதாக 1910,1912,1923 காலப்பகுதிகளில் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயருடன் வெளிவந்தபோதும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் தமிழ்ச்சங்க அகராதி என்றே வழங்கியது. சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தியமை இந்நூலின் புதிய முயற்சியாகும்.
ஒழுங்கமைப்பு
சொற்பொருளுக்கு இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களை வழங்கிய முதலாவது தமிழ்-தமிழ் அகராதி என்ற சிறப்பு இவ்வகராதிக்கு உண்டு. 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சொல்லின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் முன்னைய அகராதிகளில் இல்லாத பல புதிய சொற்களும் திருந்திய விளக்கங்களும் காணப்படுகின்றன. ஓரு சொல் பல பொருள்களுக்கு விளக்கம் தரும்போது 1,2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது ஓரு சொல்லுக்கு எத்தனை பொருள் என்பதை அடையாளங் காண உதவுகிறது.
Records of thoughts
(முத்துத்தம்பிப் பிள்ளை. யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்,1902)
வரலாறு
யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு இலங்கை இராஜ மந்திரசபை அங்கத்தவருள் ஒருவரான ஸ்ரீமான் பொ.குமாரசாமி முதலியார் அவர்களின் ஞாபகச் சின்னமாக வெளியிடப்பட்ட இந்நூல்; தமிழ் அகராதி வரலாற்றில் என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரு சாதனமாகக் கருதப்படுகிறது. நூலின் தலைப்பில் தமிழ் இதிகாச அகராதி எனக் குறிப்பிடப்பட்டிருப்பினும் கலைக்களஞ்சியப் பண்பே இதில் அதிகம் காணப்படுகிறது.
உள்ளடக்கம்
வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைப்பு
இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.
Personalities
Personalities
வித்துவசிரோன்மணி சி.கணேசையர் (01-041878-08-11-1958)
புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம்
இலக்கணப் பேரறிஞர் - தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்
கட்டுரையாளர் - செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஈழகேசரி பத்திரிகைகளில் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள்
பாடபேத ஆய்வாளர் -
விவாத அறிஞர் - வெளிவந்த இடங்கள் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, கலாவல்லி, ஞானசித்தி,ஈழகேசரி, சுதேசநாட்டியம்.
கவிபாடும் புலமிக்கோன் - திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை, புன்னை மும்மணிமாலை, வருத்தலைவிளான் மருதடி விநாயகர் பிரபந்தம், வருத்தலைவிளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல், மேலைக்கரம்பொன் சண்முகநாதன் திருவிரட்டை மணிமாலை. சாற்றுகவிகள், சமரகவிகள், தனிப்பாடல்கள். யாப்பு வடிவங்கள் வெண்பா, விருத்தம், அகவல், கட்டளைக்கலித்துறை
நூலாசிரியன் - ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் வரலாறு, குசேலர் சரிதம்
போதானாசிரியர் - வண்ணார்பண்ணை விவேகானந்த வித்தியாசாலை, நாவலர் காவிய பாடசாலை, நயினாதீவு சைவப்பாடசாலை, சுன்னாகம் பிராசீன பாடசாலை,
பட்டங்கள்: பண்டிதர், வித்துவான், மகாவித்துவான், வித்துவசிரோண்மனி, தொல்காப்பியக்கடல், இலக்கணஞாயிறு,
Personalities
ஆறுமுகநாவலர் (18-12-1822-05-12-1879)
நல்லு)ர் யாழ்ப்பாணம்
தமிழும் சைவமும் தழைக்க தனது வாழ்ககை முழுதும் பாடுபட்ட மகான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் பின்னர் ஆசிரியரும். சிறந்த பதிப்பாசிரியர். தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர், வண்ணார்பண்ணை சைவப் பிரகாசவித்தியாசாலையின் நிறுவுனர். மிகச் சிறந்த சமயச்சொற்பொழிவாளர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டகயமக வந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
By Author+wikipedia
Personalities
Personalities
காந்தி அடிகளாரின் கொள்கைகளைப் பின்பற்றி இவர் எழுதிய காந்திவெண்பா பிரசித்திபெற்றது. சேர்.பொன் இராமனாதனின் மதிப்புக்கு உரிய இவர் இராமந்தன்கல்லூரியிலும், பரமேஸ்வராக்கல்லூரியிலும் கடமை புரிந்தார். 1922 இல் இவரால் வெளியிடபட்ட 'உலகியல் விளக்கம்' எனும் செய்யுள் நூல்
உலக பிரசித்தி பெற்றது.